Friday 19 August, 2011

வள்ளலார் அறிவுரைப்படி ஆரோக்கியமாக வாழ்வோம்

வள்ளலார் அறிவுரைப்படி ஆரோக்கியமாக வாழ்வோம்


வள்ளலார் கூறும் வாழ்க்கை முறை;

வாழ்க்கை முறையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு சில வழிமுறைகளை கூறியுள்ளார் வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார். அவர் கூறும் வாழ்க்கை முறை.

காலையில் ;

www.astrosuper.com நல்லநேரம் இணையதளம்
சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுந்துவிடவேண்டும். எழுந்ததும், சிறிதுநேரம் அமர்ந்து, கடவுளை தியானம் செய்ய வேண்டும்.
இயற்கை கடன்களை கழித்த பின் செவிகள், கண்கள், நாசி, வாய், தொப்புள் இவற்றில் உள்ள அசுத்தங்களையும், கை, கால் போன்ற உறுப்புகளில் உள்ள அழுக்குகளையும் வெந்நீரால் தேய்த்து சுத்தமாக கழுவ வேண்டும். பின்னர், வேலங்குச்சி, ஆலம் விழுது கொண்டு பல் தேய்த்து, அதைத் தொடர்ந்து கரிசலாங்கண்ணி கீரைத்தூள் கொண்டு உள்ளே சிறிது சாறு போகும்படி பல் தேய்த்து வாய் கொப்பளிக்க வேண்டும்.

அதன்பிறகு, கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, தூதுவளை, முசுமுசுக்கை இலை சேர்ந்த கலவை கால் பங்கு, சீரகம் கால் பங்கு, இவற்றை ஒன்றாகச் சேர்த்து பொடியாக தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த பொடியில் ஒரு கிராம் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்க்க வேண்டும். இன்னொரு டம்ளரில் பசும்பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு டம்ளர் திரவத்தையும் ஒன்றாக கலந்த நன்கு கொதிக்க வைத்து, ஒரு டம்ளராக சுண்டிய பின் அதில் நாட்டுச்சர்க்கரை கலந்து சாப்பிட வேண்டும்.

காலை வெயில் உடலில் படாமல் இருக்க மேல் சட்டை அணிய வேண்டும்.
ஓன்றரை மணி நேரம் கழித்து, வெயிலில் மிதமான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். பின்னர், இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும். சிறிது நேரம் கடவுளை வணங்க வேண்டும்.

பசி எடுத்தவுடன் சாப்பிட வேண்டும். சாப்பிடும்போது அள்ளிப் போட்டுக் கொள்ளகூடாது. சாப்பிட்டபின் ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்க வேண்டும்.

உப்பைக் குறையுங்கள்;
www.astrosuper.com நல்லநேரம் இணையதளம்
கிழங்கு வகைகளை உண்ணக் கூடாது. ஆனால், கருணைக்கிழங்கு உண்ணலாம். பேயன் வாழைப்பழம், ரஸ்தாளி வாழைப்பழம் ஆகியவற்றை உட்கொள்ளலாம். பதார்த்தங்களில் புளி, மிளகாய் ஆகியவற்றை குறைவாகவும், மிளகு, சீரகம் ஆகியவற்றை அதிகமாகவும் சேர்க்க வேண்டும். கடுகு சேர்ப்பது அவசியமல்ல. உப்பை குறைவாகச் சேர்த்துக் கொள்வது உடல் நலத்துக்கு நல்லத. தாளிப்பதற்கு நல்லெண்ணெய் உபயோகிக்கலாம். அல்லது பசுவெண்ணெயால் தாளிக்கலாம்.

கத்திரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், புடலங்காய், கொத்தவரைக்காய் இவற்றை கறி செய்வதற்கு உபயோகிக்கலாம். முருங்கை, கத்தரி, பேயன் வாழைக்காய் ஆகியவற்றைக் கொண்டு அடுத்தடுத்து கறி செய்யலாம். மற்றவற்றை  எப்போதாவது செய்யவேண்டும்.

சர்க்கரைப்பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் போன்ற சித்தரான்னங்களை அடிக்கடி சாப்பிடக்கூடாது. எப்போதாவது சாப்பிடலாம்.
புளித்த தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.

பருப்பு வகைகளில் துவரம் பருப்பை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். மற்ற பருப்ப வகைகளை எப்போதாவது சேர்த்துக் கொள்ளலாம்.
விருந்து என்றாலும் சற்று குறைவாகவே உண்ண வேண்டும்.
விருந்து என்றாலும் சற்று குறைவாகவே உண்ண வேண்டும்.
வெந்நீரையே குடிக்க வேண்டும்.

நலம் தரும் மாலை வெயில்;
www.astrosuper.com நல்லநேரம் இணையதளம்

மாலைவெயில் உடலில் படுமாறு சற்று நடக்க வேண்டும். காற்று அதிகமாக இருந்தால், திறந்த வெளியில் நடக்கக் கூடாது. வெய்யில், பனி, மழை ஆகியவை உடலில் படுமாறும் நடக்கக்கூடாது.
இரவின் தொடக்கத்தில் முகம், கை, கால் ஆகியவற்றைக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவேண்டும். பின், தியானம் செய்யலாம். மந்திரங்கள் சொல்லி கடவுளை வணங்கலாம். நல்ல புத்தங்கள் படிக்கலாம். வீட்ட விவகாரங்கள் பேசலாம்.
www.astrosuper.com நல்லநேரம் இணையதளம்
பிறகு இரவு உணவை உட்கொள்ள வேண்டும். பகலில் எந்த அளவுக்கு சாப்பிட்டீர்களோ, அதில் அரைப்பங்கு அளவே இரவில் உண்ண வேண்டும்.
இரவில் கீரை தயிர் மற்றும் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவு வகைகளை உண்ணக்கூடாது. சூடான பதாhத்தங்களையே உண்ணவேண்டும்.

இரவு சாப்பாடு முடிந்து 2 மணிநேரத்திற்குப் பின் பசும்பாலைக் காய்ச்சிக் குடிக்க வேண்டும்.

படுக்கையறையில்;
www.astrosuper.com நல்லநேரம் இணையதளம்
பெண்களுடன் உறவு கொள்ளும் நாட்களில், அதற்கு முன்பே அதுபற்றி எண்ணாமல் உறவு கொள்ள வேண்டும். ஒரே இரவில், ஒரு முறைக்கு மேல் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது.

உடலுறவு முடிந்த பின் உடலைத் தூய்மைப்படுத்திக் கொண்டு கடவுளை தியானம் செய்து, அதன்பின் உறங்க வேண்டும். 4 நாட்களுக்கு ஒருமுறை உடலுறவு வைத்துக் கொள்வது அதமம். 8 நாட்களுக்கு என்றால் மத்திமம். 15 நாட்களுக்கு ஒருமுறை என்றால் உத்தமம்.

படுக்கும்போது இடது கை பக்கமாகவே உறங்க வேண்டும்.

கோலை, கோபம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் போன்றவை கூடாது.

கத்திப்பேசுதல், வேகமாக நடந்து செல்லுதல், ஓடி நடத்தல், வழக்குப்போடுதல், சண்டையிடுதல் போன்றவை கூடாது.
பதற்றம் அதிகரித்தால், பிராண வாயு அதிகமாக செலவாகும். அதனால் பதற்றம் கூடாது.

4 நாட்களுக்கு ஒரு முறை நல்லெண்ணெய் தலையில் தேய்த்துக் கொண்ட, வெந்நீரில் குளிக்க வேண்டும். அல்லது வாரத்துக்கு ஒருமுறை காய்ச்சிய நல்லெண்ணெயை தலையில் தேய்த்துக் கொண்டு முழுகவேண்டும்.

புகை, கஞ்சா, கள், சாராயம் போன்றவை கூடாது.

3 மாதத்துக்கு ஒருமுறை அல்லது 6 வாரத்துக்கு ஒருமுறை பேதிக்கான மருந்தை உட்கொள்ள வேண்டும்.

www.astrosuper.com நல்லநேரம் இணையதளம்
உடல்வலிமை பெற;

கெட்டி மிளகு அரைக்கிலோ எடுத்துக் கொள்ளவேண்டும். அதை பேயன் வாழையின் கிழங்குச் சாற்றில் 3 நாட்கள் ஊற வைக்க வேண்டும். ஓவ்வொரு நாளும் இரவில் ஊற வைத்து, பகலில் நிழலில் உலர்த்த வேண்டும். 

இவ்வாறு பேயன் வாழைச்சாற்றில் ஊற வைத்த நிழலில் உலர வைத்து மிளகை இளநீரில் 3 நாள், கரிசலாங்கண்ணிச் சாற்றில் 3 நாள், பொன்னாங்கண்ணி கீரைச்சாற்றில் 3 நாள், பசுங்கோமியத்தில் 3 நாள், பசும்பாலில் 3 நாள் எனத்தனித்தனியாக இரவில் ஊறவைத்து, பகலில் நிழலில் உலர்த்தி, நன்கு புடைத்து சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவற்றில் 5 மிளகுகளை தினமும் காலை வேளையில் உட்கொண்டு வந்தால் நமது உடல் வலிமை பெறும். எந்த நோயும் நெருங்காது.
இப்படி வாழ்வதுதான் நல்லது என்கிறார் வள்ளலார்.


Read more: http://www.astrosuper.com/2011/07/blog-post_2720.html#ixzz1VUNYcueU


Monday 13 June, 2011

ஐந்தறிவு ஜீவனின் ஜீவகாருண்யம்

ஐந்தறிவு ஜீவனின் ஜீவகாருண்யம்  

ராயக்கோட்டை அருகே அதிசய சம்பவம்


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி-ராயக்கோட்டை சாலையில் சஜ்ஜலப்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் அதே கிராமத்தில் வயலில் வீடு கட்டி வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர் கொப்பக்கரை கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் என்பவரிடம் இருந்து இரண்டு காளை மாடுகளை விலைக்கு வாங்கினார்.

கடந்த வாரம் கிருஷ்ண மூர்த்தி தனது காளை மாடுகளுடன் விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது சஜ்ஜலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரன், சக்திவேல், முனியப்பன், சங்கர், சீமான் என்ற சக்திவேல் ஆகிய 5 பேர் வழி மறித்து இந்த வழியாக செல்ல வேண்டாம் என்று தகராறு செய்தனர்.

இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்கு இருந்து சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு வயலில் உள்ள வைக்கேல் போருக்கு சிலர் தீவைத்து விட்டனர்.

இதில் வைக்கோல் போர் எரிந்தது. அருகில் உள்ள மாட்டுக் கொட்டகையிலும் தீப்பிடித்தது. இதில் ஒரு மாடு திமிறிக் கொண்டு கயிறை அறுத்துக் கொண்டு பழைய எஜமான் மாதேஷ் என்பவர் வீட்டுக்கு சென்று கத்தியது.

நள்ளிரவு நேரத்தில் மாடு அலறுவதை பார்த்த அவர் எழுந்து வெளியே வந்தார். பின்னர் அந்த மாடு மீண்டும் கிருஷ்ணமூர்த்தியின் வயல் வீட்டுக்கு ஓடியது. அவரும் ஓடினார். அங்கு தீ எரிந்து கொண்டு இருந்தது. வீட்டில் வெளிப்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. வீட்டுக்குள் சூழ்ந்து உள்ள புகை மண்டலத்தால் சிலர் கத்துவது தெரிய வந்தது.

மாதேஷ் உடனடியாக தாழ்ப்பாளை திறந்தார். வீட்டுக்குள் படுத்து இருந்த கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி வள்ளி, இரண்டு குழந்தைகள் மற்றும் வள்ளியின் தங்கை நந்தினி, தம்பி ராமமூர்த்தி ஆகியோர் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர்.

பின்னர் நடந்தவற்றை மாதேஷ் கூறவும் 6 பேரும் காளை மாட்டால் உயிர் பிழைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்தனர். வாயில்லாத ஜீவன் 6 பேர் உயிரை காப்பாற்றிய விவரம் அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ள கிராம மக்கள் அந்த காளை மாட்டை அதிசயமாக பார்த்து செல்கின்றனர்.

தற்போது அந்த காளை மாடு வி.ஐ.பி அந்தஸ்தை பெற்று உள்ளது. தீ விபத்தில் அந்த 2 மாடுகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டு உள்ளது. அதற்கு கால்நடை டாக்டர் சிகிச்சை அளித்தார்.

பின்னர் இந்த தீவைப்பு சம்பவம் குறித்து கிருஷ்ண மூர்த்தி ராயக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசில் முன் விரோதம் காரணமாக 5 பேர் தீவைத்து விட்டதாக சந்தேகப்படுவதாக கூறி உள்ளார். இது குறித்து இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Friday 11 March, 2011

திருஅருட்பா-1

திருஓங்கு புண்ணியச் செயல்ஓங்கி அன்பருள்
திறலோங்கு செல்வம்ஓங்கச்
செறிவோங்க அறிவோங்கி நிறைவான இன்பம்
திகழ்ந்தோங்க அருள்கொடுத்து
மருஓங்கு செங்கமல மலர்ஓங்கு வணம்ஓங்க
வளர்கருணை மயம்ஓங்கிஓர்
வரம்ஓங்கு தௌ;அமுத வயம்ஓங்கி ஆனந்த
வடிவாகி ஓங்கிஞான
உருஓங்கும் உணர்வின்நிறை ஒளிஓங்கி ஓங்கும்மயில்
ஊர்ந்தோங்கி எவ்வுயிர்க்கும்
உறவோங்கும் நின்பதம்என் உளம்ஓங்கி வளம்ஓங்க
உய்கின்ற நாள்எந்தநாள்
தருஓங்கு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே